அலுவலகத்திற்குள் அழைத்து பாலியல் சேஷ்டை புரிந்ததாக மாணவி புகார், அதிபரின் அறைக்குள் சீ.ஐ.டி என கூறி நுழைந்து தாக்குதல், அதிபர் கைது..

ஆசிரியர் - Editor I
அலுவலகத்திற்குள் அழைத்து பாலியல் சேஷ்டை புரிந்ததாக மாணவி புகார், அதிபரின் அறைக்குள் சீ.ஐ.டி என கூறி நுழைந்து தாக்குதல், அதிபர் கைது..

19 மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர் ஒருவரை பொலிஸார் நேற்றுமுன்தினம் கைது செய்துள்ளனர். 

கா.பொ.த உயர் தரத்தில் கற்றுவரும் மாணவி ஒருவர் பாடசாலை ஒன்றில் விடுதியில் இருந்து கொண்டு வேறு ஒரு பாடசாலையில் கல்வி கற்றுவருகின்றார்.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 21 ம் திகதி விடுதி அமைந்துள்ள பாடசாலை அதிபர் மாணவியை தனது காரியாலயத்திற்கு வரவழைத்து 

அந்த மாணவி மீது பாலியால் சேட்டை விட முயற்சித்துள்ளதையடுத்து அங்கிருந்து மாணவி தப்பி ஓடியுள்ளார்.

ந்த சம்பவத்தை அறிந்த 4 பேர் கொண்ட குழுவினர் கடந்த மாதம் 4 ம் திகதி பாடசாலைக்குள் சென்று தாம் சிஜடி என தெரிவித்து அதிபரை தாக்கியதுடன் 

அவரை தாக்கிய போது வீடியோ எடுத்துள்ளனர். இந்த அதிபர் மீது தாக்குதல் நடாத்திய வீடியோ வெளியாகியதையடுத்து இதனை அறிந்த பாதிக்கப்பட்ட மாணவி 

சம்பவதினமான நேற்று திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு மட்டு பொலிஸ் நிலையத்தில் அதிபருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் அதிபரை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து கைது செய்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு