யாழ்.கோப்பாய் - செல்வபுரம் பகுதியை சேர்ந்த போதைப் பொருள் வியாபாரியை மடக்கியது பொலிஸ்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.கோப்பாய் - செல்வபுரம் பகுதியை சேர்ந்த போதைப் பொருள் வியாபாரியை மடக்கியது பொலிஸ்..!

யாழ்.கோப்பாய் - செல்வபுரம் பகுதியை சேர்ந்த 28 வயதான நபர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைதான நபர் பிரபல போதைப் பொருள் வியாபாரி என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். 

மேலும் குறித்த நபர் பல நாட்களாக தேடப்பட்டுவந்த நிலையில் நேற்று மாலை கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சுமார் 5 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டிருக்கின்றனர். மேலும் கல்வியங்காடு சந்தியில் சுமார் 36 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் 1 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைதாகியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு