மனைவியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடி தலைமறைவான கணவன்!

ஆசிரியர் - Editor I
மனைவியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடி தலைமறைவான கணவன்!

குடும்ப தகராறினால் கணவன் பிரிந்து சென்றிருந்த நிலையில் அவரை சமாதானம் பேசி அழைத்துவந்த மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தலைமறைவான சம்பவம் மட்டக்களப்பு - ஆரம்யம்பதி பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

ஆரையம்பதி, மாவிலந்துறயைச் சேர்ந்த 60 வயதுடைய 7 பிள்ளைகளின் தாயாரான நவரெத்திணம் சோதிமலர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பிள்ளைகள் அனைவரும் திருமணம் முடித்து வேறு பிரதேசத்தில் வாழ்ந்துவருகின்றனர்.

இந்நிலையில் கணவனும் மனைவியும் தனிமையில் வாழ்ந்து வருகின்றனர். இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுவதுடன் கணவன் மனைவியைவிட்டு வீட்டை விட்டு வெளியேறி 

கடந்த ஒரு மாதகாலமாக கல்லாறு பிரதேசத்தில் இருந்துள்ள நிலையில் சம்பவதினமான நேற்று அவரை தேடி மனைவி சென்று சமாதானம் பேசி அழைத்து வந்துள்ளார். 

இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு கணவன் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு