17 வயதான மாணவியின் அந்தரங்க வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த 3 இளைஞர்கள் கைது!

ஆசிரியர் - Editor I
17 வயதான மாணவியின் அந்தரங்க வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த 3 இளைஞர்கள் கைது!

17 வயதான பாடசாலை மாணவி ஒருவரின் அந்தரங்க வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் 3 இளைஞர்களை பொலிஸார் கைது செய்திருக்கின்றனர். 

குறித்த சம்பவம் மொனராகலை பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த காணொளியை மாணவி தனது காதலனுடன் பகிர்ந்துள்ளதாகவும், அவர் அதனை தனது நண்பர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் 

நண்பர்கள் சமூக ஊடகங்களில் அந்த வீடியோவை கசியவிட்டுள்ளனர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களும் மொனராகலை பண்டாரவாடிய, பட்டியாலந்த 

மற்றும் மகந்தனமுல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் 20, 23 மற்றும் 24 வயதுடையவர்கள் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர் . 3 இளைஞர்களும் மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு