சந்தேகத்திற்கிடமான நடமாட்டம், விசாரணை நடத்திய அதிகாரிகளுக்கு அதிர்ச்சி! 8.5 கிலோ தங்கம், 17 கோடியாம்..

ஆசிரியர் - Editor I
சந்தேகத்திற்கிடமான நடமாட்டம், விசாரணை நடத்திய அதிகாரிகளுக்கு அதிர்ச்சி! 8.5 கிலோ தங்கம், 17 கோடியாம்..

சுமார் 17 கோடி ரூபாய் பெறுமதியான 8.5 கிலோ கிராம் தங்கத்துடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து இன்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த மூவரிடமிருந்து 8 கிலோ 500 கிராம் எடையுடைய 16 கோடி ருபாய் பெறுமதியான தங்கம் மீட்கப்பட்டது.

சூட்சுமமான முறையில் தனது பயணப்பையில் தங்கத்தை மறைத்து கொண்டு வந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த விமானத்திலேயே நாட்டிற்கு வருகை தந்த நபர் ஒருவர் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களை கட்டுநாயக்க காவல் துறையினரிடம் ஒப்படைக்க கட்டுநாயக்க சுங்க அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு