வாடகைக்கு வீடு தேடுவதாக கூறி கொள்ளையில் ஈடுபட்ட ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்ட 5 பேர் கைது! இருவர் பெண்கள்..

ஆசிரியர் - Editor I
வாடகைக்கு வீடு தேடுவதாக கூறி கொள்ளையில் ஈடுபட்ட ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்ட 5 பேர் கைது! இருவர் பெண்கள்..

வாடகைக்கு வீடு தேடுவதாக கூறிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்து தங்க நகைகளை கொள்ளையடித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்கள் பேராதனை, பிலிமதலாவ மற்றும் தொம்பே ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் 17 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். வாடகைக்கு வீடொன்றை தேடிச் செல்லும் போர்வையில் தலவத்துகொட பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்குச் சென்று அங்கு தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வீட்டின் உரிமையாளரான பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டி காயப்படுத்தியதாகவும் தூக்க மாத்திரைகள் கொடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த குழுவினர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் குறித்த பெண்ணுக்கு சொந்தமான கடையை வாடகைக்கு எடுத்து அங்கு உணவகத்தை நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.

திருடப்பட்ட தங்கத்தின் ஒரு பகுதி மருதானையில் உள்ள தங்கக் கடைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மற்றுமொரு பகுதியை பேராதனை பிரதேசத்தில் உள்ள அடகு நிறுவனம் ஒன்றில் அடகு வைத்து பணம் பெறப்பட்டமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் சந்தேக நபர்களை கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக தலங்கம பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு