ஜ.பி.எல் ஏலம் டிசம்பர் நடுப்பகுதியில்!!

ஆசிரியர் - Editor II
ஜ.பி.எல் ஏலம் டிசம்பர் நடுப்பகுதியில்!!

இந்தியன் பிரீமியர் லீக் ஜ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தினை எதிர்வரும் டிசம்பர் நடுப்பகுதியில் நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக டிசம்பர் 16 ஆம் திகதி ஜ.பி.எல் ஏலத்தினை நடாத்திக் கொள்ள முடியும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இருப்பினும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, ஐ.பி.எல் அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினர் கலந்துரையாடியதன் பின்னர் இறுதி திகதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கடந்த வருடத்தை விடவும் ஏலத்தை ஆரம்பிக்கும் தொகை இந்த வருடத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு