யாழ்.நல்லுாரில் வீடொன்றின் மீது விஷமிகள் கல்வீசி தாக்குதல்..! பொலிஸார் தீவிர விசாரணை..

ஆசிரியர் - Editor I
யாழ்.நல்லுாரில் வீடொன்றின் மீது விஷமிகள் கல்வீசி தாக்குதல்..! பொலிஸார் தீவிர விசாரணை..

யாழ்.நல்லுாரில் உள்ள வீடொன்றின் மீது இனந்தொியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றனர். 

ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளரும் மனித உரிமைகள செயற்பட்டளாருமான முருகவேல் சதாசிவம் என்பவருடைய வீட்டின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. 

குறித்த தாக்குதல் சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலினால் வீட்டின் யன்னல்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிகக்கப்படுகின்றது.

இச் சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு