யாழ்.ஆடியபாதம் வீதியில் வர்த்தக நிலையத்தை உடைத்து திருடர்கள் கைவரிசை!

ஆசிரியர் - Editor I
யாழ்.ஆடியபாதம் வீதியில் வர்த்தக நிலையத்தை உடைத்து திருடர்கள் கைவரிசை!

யாழ்.கல்வியங்காடு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றை உடைத்து 5 லட்சம் ரூபாய் பெறுமதியான பலசரக்க பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளது. 

இந்த சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. கல்வியங்காடு - ஆடியபாதம் வீதியில் உள்ள குறித்த வர்த்தக நிலையத்தின் பிரதான வாசலின் பூட்டை உடைத்து உள்நுழைந்த திருடர்கள். 

அரிசி, பால்மா, எண்ணெய், கோதுமை மா, பிஸ்கட் உள்ளிட்ட சுமார் 5 லட்சம் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு