8 நாட்கள் வீட்டைவிட்டு வெளியேறகூடாது என சொன்னாராம் காதலன்! ஆசிரியை உயிரை மாய்ப்பு..

ஆசிரியர் - Editor I
8 நாட்கள் வீட்டைவிட்டு வெளியேறகூடாது என சொன்னாராம் காதலன்! ஆசிரியை உயிரை மாய்ப்பு..

யாழ்.கலட்டி பகுதியில் காதலன் கண்டித்ததால் ஆசிரியை ஒருவர் உயிரை மாய்த்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தில் சி.நிருத்திகா (வயது 24) பொலிஸார் தொிவித்துள்ளனர். குறித்த ஆசிரியை நேற்றுமுன்தினம் தனது காதலருக்கு தொியாமல் நண்பி ஒருவரின் திருமண வீட்டிற்கு சென்றுள்ளார். 

இந்நிலையில் காதலன் பலதடவை தொலைபேசி அழைப்பு எடுத்திருந்தபோதும் அவர் தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் குறித்த பெண் திருமண வீட்டுக்கு சென்ற சம்பவத்தினை தெரிவித்துள்ளார். ஆத்திரமடைந்த காதலன் 8 நாட்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லக்கூடாது என கண்டித்துள்ளார்.

இதனால் மனவிரக்தி அடைந்த காதலி தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த ஆசிரியரான பெண்ணின் உயிரிழப்பு 

ஆறு வருட காதலை முற்றுப்புள்ளிக்கு விட்டுச் சென்றுள்ளது. சடலம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

இறப்பு விசாரணையினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு