சுருட்டு புகைப்பதற்கு மூட்டிய தீக்குச்சி ஆடையில் பற்றிக் கொண்டதில் படுகாயமடைந்த மூதாட்டி மரணம்! யாழ்.வல்வெட்டித்துறையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
சுருட்டு புகைப்பதற்கு மூட்டிய தீக்குச்சி ஆடையில் பற்றிக் கொண்டதில் படுகாயமடைந்த மூதாட்டி மரணம்! யாழ்.வல்வெட்டித்துறையில் சம்பவம்..

சுருட்டு புகைப்பதற்காக தீக்குச்சியை மூட்டிய மூதாட்டி ஒருவர் தீக்குச்சியை அணைக்காமல் கீழே போட்ட நிலையில் ஆடையில் தீ பற்றிக் கொண்டதில் படுகாயமடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் வல்வெட்டித்துறை - திரைவளவை பகுதியில் கடந்த 4ம் திகதி இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் பவணம் கிருஷ்ணசாமி என்ற மூதாட்டியே உயிரிழந்திருக்கின்றார். 

படுகாயமடைந்த மூதாட்டி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நடந்த சம்பவத்தை விசாரணையில் பொலிஸாருக்கு தொியப்படுத்தியுள்ளார். 

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மூதாட்டி உயிரிழந்துள்ளார். சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு