கோழிப் பிரியாணி பார்சலில் கரப்பான் பூச்சி! கைதான உணவக உரிமையாளருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டம்..

ஆசிரியர் - Editor I
கோழிப் பிரியாணி பார்சலில் கரப்பான் பூச்சி! கைதான உணவக உரிமையாளருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டம்..

கோழிப் பிரியாணியில் கரப்பான் பூச்சி கிடந்த சம்பவம் தொடர்பில் கைதான உணவக உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் பீற்றர் போல் எச்சரித்து விடுவித்துள்ளார். 

கடந்த மாதம் 30 ம் திகதி மட்டு போதனா வைத்தியசாலையில் பிரிவு ஒன்றில் கடமையாற்றிவரும் தாதியர்கள் விருந்து உபசாரம் ஒன்றிற்காக கோழிப் பிரியாணியை ஓடர் கொடுத்து வாங்கிச் சென்று 

உண்ணுவதற்காக உணவுப் பொட்டலத்தை திறந்தபோது ஒருவரின் பொதியில் கோழி இறைச்சியுடன் இறந்த நிலையில் கரப்பான் பூச்சியும் இருந்துள்ளது. 

இதனையடுத்து மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து உடனடியாக பொதுச் சுகாதார அதிகாரிகள் குறித்த உணவகத்தை சோதனையிட்டதுடன் 

உணவக முதலாளியை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் 8ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு 

25 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதியளித்தார்.குறித்த வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்காக எடுத்தபோது கடை உரிமையாளரை நீதவான் எச்சரித்து 10 ஆயிரம் ரூபா அபதாரமாக செலுத்துமாறு உத்தரவிட்டார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு