தந்தையின் வாகனத்திற்கு கீழே விழுந்த 2 வயது குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்த சோகம்..

ஆசிரியர் - Editor I
தந்தையின் வாகனத்திற்கு கீழே விழுந்த 2 வயது குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்த சோகம்..

தந்தையின் வாகனத்திற்குள் சிக்கி 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் திருகொணமலை - நாயன்மார்திடல் பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் ரஜீந்தன் நட்சத்திரா (02) எனும் சிறுமியே உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

தந்தை வாகனத்தை பின்னால் எடுத்த போது சிறுமி தடக்கி வீழ்ந்து வாகனத்திற்க்குள் சிக்குண்டதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த சிறுமியின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலாகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு