இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி கோர விபத்து! 21 வயது இளைஞன் பலி, தாயும் 4 வயது மகளும் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி கோர விபத்து! 21 வயது இளைஞன் பலி, தாயும் 4 வயது மகளும் படுகாயம்..

இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், தாயும் 4 வயது மகளும் படுகாயமடைந்துள்ளனர். 

குறித்த சம்பவம் மட்டக்களப்பு - சந்திவெளி பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கோரகல்லிமடு கிரான் எனும் இடத்தைச் சேர்ந்த 

21 வயதுடைய ஜீவரெத்தினம் சனுஜன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார், மேலும்  இந்த விபத்தல் சந்திவெளி சந்தை வீதியைச் சேர்ந்த தாயும், 04 வயதுடைய மகளும் 

படுகாயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 

மேலதிக விசாரணைகளை சந்திவெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு