யாழ்.மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள சில வர்த்தகர்களின் பொறுப்பற்ற செயல், பேருந்து நிலையத்தில் தேங்கிய மழை வெள்ளம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள சில வர்த்தகர்களின் பொறுப்பற்ற செயல், பேருந்து நிலையத்தில் தேங்கிய மழை வெள்ளம்!

யாழ்ப்பாணத்தில் நேற்றய தினம் பெய்த மழையினால் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் அதிகளவு வெள்ளம் தேங்கியுள்ளது. 

இந்நிலையில் கடுமையான சிரமத்தின் மத்தியில் யாழ்.மாநகரசபை பணியாளர்களால் பிரதி முதல்வர் துரைராஜா ஈசன் மற்றும் யாழ்.மாநகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன் ஆகியோரின் கண்காணிப்புடன் நள்ளிரவு வரை வடிகால்கள் துாய்மையாக்கப்பட்டு வெள்ளம் வடிந்தோட வழி செய்யப்பட்டது. 

வடிகாலில் போடப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொலித்தீன் பைகளால் உருவான அடைப்பே இதற்கு காரணமாகும். மேலும் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள சில வர்த்தக நிலையங்களினதும், 

பொதுமக்களினதும் பொறுப்பற்ற செயற்பாடுகளே இந்த வெள்ளம் தேங்குவதற்க காரணம் என யாழ்.மாநகரசபை உறுப்பினர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு