யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவில் தொடர் திருட்டு! சந்தேகநபரை ஹெரோயினுடன் மடக்கிய பொலிஸார், திருடப்பட்ட பொருட்களும் மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவில் தொடர் திருட்டு! சந்தேகநபரை ஹெரோயினுடன் மடக்கிய பொலிஸார், திருடப்பட்ட பொருட்களும் மீட்பு..

யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக பல இடங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட ஒருவர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் அண்மைய நாட்களில் குப்பிளான் மற்றும் புன்னாலை கட்டுவன் பகுதிகளில் நீர் இறைக்கும் மின் மோட்டார் இயந்திரங்கள், துவிச்சக்கர வண்டிகள் 

மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் திருட்டு போனதாக முறைப்பாடுகள் பதிவாகியிருந்தன. இந்நிலையில் யாழ்.மாவட்ட குற்றதடுப்பு பிரிவிற்கு கிடைத்த விசேட தகவலுக்கு அமைய குப்பிளான் - கம்பம் புலம் பகுதிக்கு விரைந்த 

குற்றத்தடுப்பு பிரவினர் 07துவிச்சக்கர வண்டிகள், 04 மோட்டார், 02 எரிவாயு சிலிண்டர்களை கைப்பற்றியதோடு குறித்த திருட்டில் ஈடுபட்ட சந்தேகத்தின் அடிப்படையில் 27 வயதான அதே பகுதியைச் சேர்ந்த இளைஞனை கைது செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட இளைஞனிடம் இருந்து 80 மில்லிகிராம் ஹெரோயினையும் கைப்பற்றினர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு