ஆசிய கோப்பையில் சச்சின் - அப்ரிடி சாதனையை முறியடிக்கப்படுமா? -ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு-

ஆசிரியர் - Editor II
ஆசிய கோப்பையில் சச்சின் - அப்ரிடி சாதனையை முறியடிக்கப்படுமா? -ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு-

ஆசிய தொடரில் இலங்கை முன்னாள் அணித்தலைவரும், அதிரடி துடுப்பாட்ட வீரருமான ஜெயசூர்யா 24 போட்டிகளில் விளையாடி 1220 ஓட்டங்களைப் பெற்று முதலிடத்தில் உள்ளார்.

இந்திய வீரர்களில் அதிகபட்சமாக டெண்டுல்கர் 23 போட்டிகளில் விளையாடி 971 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். மேலும் இத் தொடரில் அதிக சிக்சர் அடித்த வீரராக பாகிஸ்தான் முன்னாள் அணித்தலைவர் அப்ரிடி உள்ளார். அவர் 27 போட்டிகளில் 26 சிக்சர்கள் அடித்து உள்ளார். அவரது சாதனையை முறியடிக்க இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இன்னும் 6 சிக்சர்களே தேவை.

ரோகித் சர்மா இதுவரை 27 போட்டியில் 21 சிக்சர் அடித்துள்ளார். மேலும் ஆசிய கிரிக்கெட்டில் ஆயிரம் ஓட்டங்களை தொடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறவும் ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு உள்ளது. அவர் 883 ஓட்டங்கள் எடுத்து உள்ளார். 

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு