நல்லைக் கந்தனின் தீர்த்தத் திருவிழா இன்று காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது!

ஆசிரியர் - Editor I
நல்லைக் கந்தனின் தீர்த்தத் திருவிழா இன்று காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது!

நல்லூர் கந்தசுவாமி ஆயல வருடாந்த பெருந்திருவிழாவின் தீர்த்த திருவிழா இன்று காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது.

இன்றைய தினம் காலை விசேட பூஜைகள் நடைபெற்று மூலஸ்தானத்தில் வேலாக வீற்றிருக்கும் வேலன், வள்ளி தெய்வானை சமேதரராக வலம்வந்தார்.

வௌர்ளி எலி வாகனத்தில் பிள்ளையாரும், மயில் வாகனத்தில் முருகப்பெருமானும் வலம் வந்தனர். நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த பக்தர்கள் திரண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இருபத்தைந்து நாள் கொண்ட மகோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை (26) மாலை கொடியிறக்கமும் சனிக்கிழமை(27) மாலை பூங்காவனமும் ஞாயிற்றுக்கிழமை(28) வைரவர் உற்சவத்துடனும் நிறைவு பெறவுள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு