யாழ்.நகர்ப்பகுதி மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் இடம்பெற்ற பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது! வயது 22 மற்றும் 23..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகர்ப்பகுதி மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் இடம்பெற்ற பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது! வயது 22 மற்றும் 23..

யாழ்.நகர்பகுதி மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் இடம்பெற்ற பல வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் மற்றும் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் அரியாலை பகுதியை சேர்ந்த இருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கோப்பாய் பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவினரின் தகவலின் அடிப்படையில் அரியாலையைச் சேர்ந்த 22,23 வயதுடைய இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் நேற்றுமுன்தினம் மாலை திருநெல்வேலி சந்தைக்கு பின்புறமாக பாடசாலை வீதியில் பெண் ஒருவரிடம் தங்கச் சங்கிலியை அபகரித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர். 

சந்தேக நபர்கள் இருவரும் அண்மையில் யாழ்.நகரில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில் துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டமையும் கண்டறியப்பட்டுள்ளது. சந்தேக நபர்களினால் திருடப்பட்ட இரண்டு துவிச்சக்கர வண்டிகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களுக்கு பல்வேறு திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதுடன் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு