நல்லூர் கந்தனின் சப்பரத் திருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்றது!

ஆசிரியர் - Editor I
நல்லூர் கந்தனின் சப்பரத் திருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்றது!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் சப்பரத் திருவிழா இன்று மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது.

நல்லூர் கந்தனின் மகோற்சவத்தின் 23ஆம் திருவிழாவான இன்று(24)

மாலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து பாரம்பரிய பறை முழங்க முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் சப்பைரதத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.

நல்லூர் மகோற்சவ திருவிழாவின்

தேர்த்திருவிழா நாளை வியாழக்கிழமையும் (25) நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் புனருத்தாரணம் செய்யப்பட்ட சித்திரத்தேர் வெள்ளோட்டம் இன்று காலை புதன்கிழமை   இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு