சக மாணவர்கள் மீது தாக்குதல், யாழ்.பல்பலைகழக மாணவர்கள் இருவருக்கு மறு அறிவித்தல்வரை வகுப்புத் தடை விதிப்பு!

ஆசிரியர் - Editor I
சக மாணவர்கள் மீது தாக்குதல், யாழ்.பல்பலைகழக மாணவர்கள் இருவருக்கு மறு அறிவித்தல்வரை வகுப்புத் தடை விதிப்பு!

சக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டி யாழ்.பல்பலைகழக மாணவர்கள் இருவருக்கு மறு அறிவித்தல் வெளியாகும்வரை வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. 

விஞ்ஞான பீடத்தை சேர்ந்த முதலாமாண்டு மாணவன் ஒருவனை கடந்த 2ஆம் திகதி பல்கலைகழக நுழைவாயிலுக்கு அருகில் வைத்து, 

சிரேஸ்ட மாணவர்கள் இருவர் தாக்கினார்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.அது தொடர்பில் பூர்வாங்க விசாரணைகளை 

பல்கலைகழக நிர்வாகம் முன்னெடுத்துள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள இரு மாணவர்களுக்கும் மறுஅறிவித்தல் வரையில் வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இரு மாணவர்களும் பல்கலைகழக வளாகத்தினுள்ளோ, விடுதிக்குள்ளோ உட்பிரவேசிக்கவும் தடை விதிக்கப்ட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு