16 வயதான சிறுமியை கடத்திச் சென்ற 21 வயதான இளைஞன் உட்பட 3 பேர் கைது!

ஆசிரியர் - Editor I
16 வயதான சிறுமியை கடத்திச் சென்ற 21 வயதான இளைஞன் உட்பட 3 பேர் கைது!

16 வயதான சிறுமியை கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் 21 வயது இளைஞன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பகுதயல் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, 

சிறுமி கடந்த 7ஆம் திகதி வீட்டில் இருந்து கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக சிறுமியின் பெற்றோர் முறைப்பாடு தெரிவித்ததையடுத்து, 

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் கடத்தலுக்கு பயன்படுத்திய முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை கைது செய்ததுடன்

கையடக்க தொலைபேசி இலக்கத்தை வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதன்போது வெருகல் பிரதேசத்தில் வீடு ஒன்றில் தங்கியிருந்த சிறுமி மீட்கப்பட்டதுடன்,

21 வயதான இளைஞனையும் கடந்த வெள்ளிக்கிழமை (20) கைது செய்ததுடன் அவர்களுக்கு உதவிய வீட்டின் உரிமையாளரையும் கைது செய்தனர்.

குறித்த சிறுமியை 21 வயது இளைஞன் ஒருவர் காதலித்துவந்துள்ள நிலையில் சம்பவதினமான 7ஆம் திகதி சிறுமியை அவரது வீட்டில் இருந்து 

நண்பன் ஒருவரின் முச்சக்கர வண்டியில் கடத்தி சென்று களுவாஞ்சிகுடி பகுதியில் ஒரு பஸ்தரிப்பு நிலையத்தில் இருந்து திருகோணமலை பஸ்ஸில் 

சிறுமியை கூட்டிச் சென்று வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள வெருகல் பிரதேசத்தில் வீடு ஒன்றில் தங்கியிருந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் கூறப்பட்டது. 

இதனையடுத்து சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் கைது செய்யப்பட்ட 3 பேரையும் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதவான் முன்னிலையில்

முன்னிலைப்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு