மதுபோதையுடன் பணியில் ஈடுபட்டிருந்த சுகாதார ஊழியர்! தட்டிக் கேட்டதற்காக தாக்குதல் முயற்சி மற்றும் அச்சுறுத்தல், பணி நீக்கம் செய்ய யாழ்.மாநகரசபை நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
மதுபோதையுடன் பணியில் ஈடுபட்டிருந்த சுகாதார ஊழியர்! தட்டிக் கேட்டதற்காக தாக்குதல் முயற்சி மற்றும் அச்சுறுத்தல், பணி நீக்கம் செய்ய யாழ்.மாநகரசபை நடவடிக்கை..

மதுபோதையில் நின்று துப்புரவு பணி செய்த சுகாதார ஊழியரை தட்டிக் கேட்டதற்காக யாழ்.மாநகரசபை உறுப்பினர் மீதும், மேற்பார்வையாளர் மீதும் தாக்குதல் நடத்த முயற்சித்ததுடன் அச்சுறுத்தல் விடுத்தமைக்காக குறித்த பணியாளரை பணி நீக்கம் செய்வதற்கு யாழ்.மாநகரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. 

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, நல்லூர் ஆலய உற்சவம் இடம்பெற்றுவரும் நிலையில் நேற்று(20) அதிகாலை துப்பரவு பணியில் ஈடுபட்ட ஊழியர் மதுபோதையில் நிற்பதை அவதானித்த யாழ்.மாநகர சபை உறுப்பினர், 

குறித்த துப்புரவு பணியாளரை நாளைய தினம் வந்து கடமையில் ஈடுபடுமாறும் மதுபோதையில் நின்று பணியில் ஈடுபடவேண்டாம் என கூறுமாறு மேற்பார்வையாளருக்கு அறிவுறுத்தினார்.

இந்நிலையில் குறித்த துப்புரவு பணியாளர் மதுபோதையில் பணியில் ஈடுபட முடியாது என மேற்பார்வையாளர் கூறிய நிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட குறித்த பணியாளர் மாநகர சபை உறுப்பினர் மற்றும் மேற்பார்வையாளரை 

அச்சுறுத்தும் தாக்குதல் முயற்சியிலும் ஈடுபட்டார்.இ தனையடுத்து குறித்த துப்புரவு பணியாளருக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ள யாழ் மாநகர சபை குறித்த பணியாளரை பணியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு