யாழ்.காங்கேசன்துறை - கொழும்பு புகைரத சேவையை மேம்படுத்துவது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் ஆய்வு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.காங்கேசன்துறை - கொழும்பு புகைரத சேவையை மேம்படுத்துவது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் ஆய்வு..!

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்றைய தினம் யாழ்.மாவட்டத்திற்கு வருகைதந்துள்ளார். 

கொழும்பு - யாழ்ப்பாணம் புகையிரத சேவையில் இன்றைய மதியம் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை வந்தடைந்த அமைச்சரை, 

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் வரவேற்றனர்.

தொடர்ந்து யாழ்ப்பாணம் புகையிரத நிலைய அதிபரை சந்தித்த அமைச்சர், காங்கேசன்துறை - கொழும்பு புகையிரத சேவையை மேம்படுத்துவது, 

மற்றும் சேவைகளை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடினார்.அத்துடன், இரவு தபால் சேவையின் மீள் ஆரம்பம், 

அறிவியல் நகர், சாவகச்சேரி நிலையங்களில் உத்தரதேவி ரயில்சேவை தரித்து நிற்கும் என இந்த சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு