யாழ்.மாவட்ட வர்த்தகர்களுக்கு பாவனையாளர் அதிகாரசபை விடுத்துள்ள எச்சரிக்கை..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட வர்த்தகர்களுக்கு பாவனையாளர் அதிகாரசபை விடுத்துள்ள எச்சரிக்கை..!

நிர்ணய விலையை மீறி அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும். என மாவட்ட பாவணையாளர் அதிகார சபையின் யாழ்.மாவட்ட இணைப்பு அதிகாரி அறிவித்துள்ளார். 

முட்டைக்கான நிர்ணய விலையினை பாவனையாளர்கள் அதிகார சபை விசசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிட்டுள்ளது.வெள்ளை நிற முட்டை 43 ரூபாவும் , பழுப்பு நிற முட்டை 45 ரூபாவுக்கு விற்பனை செய்ய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆகவே விற்பனையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் , அதி கூடிய விலைக்கு முட்டையினை விற்பனை செய்தல், விலைப்பட்டிகளை காட்சிப்படுத்தாமை, போன்றவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

தற்போது இது தொடர்பில் யாழ் மாவட்ட வர்த்தகர்களுக்கு, பாவனையாளர்கள் அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகள் ஊடாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது என மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு