யாழ்.பருத்தித்துறை நகரில் தொலைபேசி விற்பனை நிலையத்தை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை!

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை நகரில் தொலைபேசி விற்பனை நிலையத்தை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை!

யாழ்.பருத்தித்துறை நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்த 7 தொலைபேசிகள் மற்றும் தொலைபேசி மீள் நிரப்பு அட்டைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 

வியாழக்கிழமை(18) இரவு வர்த்தக நிலையத்தை பூட்டிவிட்டு சென்ற அதன் உரிமையாளர் நேற்று வெள்ளிக்கிழமை(19) பிற்பகல் வர்த்தக நிலையத்தை திறந்த போதே வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு தொலைபேசி 

மற்றும் தொலைபேசிக்கான மீள் நிரப்பு அட்டைகள் திருடப்பட்ட சம்பவம் தொியவந்துள்ளது. இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

தடயவியல் பொலிசாரும் தேடுதல் நடத்தி சான்றுப் பொறுட்கள் மற்றும் கைவிரல் அடையாளங்களைப் பெற்றுச் சென்றுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு