யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி பொது வெளியில் நடந்துகொண்ட விதம்! பலரை நெகிழ வைத்தது..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி பொது வெளியில் நடந்துகொண்ட விதம்! பலரை நெகிழ வைத்தது..

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தியின் செயல்பாடு அந்த நிகழ்வில் இருந்த பலரையும் நெகிழ வைத்துள்ளது. 

வென்மேரி அறக்கட்டளை நிறுவனத்தினால் முதன்முறையாக யாழ்ப்பாணத்தில்  தமிழ் ஆளுமைகளுக்கான விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இடம்பெற்றது.

இவ்விருது வழங்கும் நிகழ்வில் தமிழ் மக்களுக்காக அரும் பணியாற்றிய பல்துறை சார்ந்தவர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். இவ் விழாவில் வைத்தியத்துறையின் ஆளுமைக்கான விருது யாழ்.போதனா வைத்திய சாலையின் முன்னாள் பணிப்பாளர் நந்தகுமாருக்கு வழங்குவதற்காக 

தற்போதைய யாழ்.போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி மேடைக்கு அழைக்கப்பட்டிருந்தார். விருது பெறவிருந்த வைத்திய கலாநிதி நந்தகுமார் தனது  இரண்டு வயதில் இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்டு இரு கால்களும் செயற் திறன் குன்றிய நிலையில் தனது தளராத முயற்சியினால் வைத்தியத்துறையில் சாதித்தித்திருந்தார்.

அதற்காகவே வைத்தியர் நந்தகுமார் ஆளுமைக்கான விருதுக்காக அழைக்கப்பட்டிருந்தார். எனினும் மேடையில் ஏறுவதற்கு வைத்தியர் நந்தகுமார் அசௌகரியப்பட்ட நிலையில் மேடையில் விருது வழங்குவதற்காக காத்திருந்த யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி 

மேடையில் இருந்து கீழ் இறங்கி விருது வழங்கப்பட இருந்த வைத்தியர் நந்தகுமாரின் ஒரு கையை தனது தோளில் வைத்து அவரை மேடைக்கு சுமந்து வந்து தனது கையால் பொன்னாடை போர்த்தி பொற்கிளி வழங்கி விருதையும் வழங்கிக் கௌரவித்தார். 

இந்த சம்பவம் அந்த சபையில் இருந்த பலரை நெகிழ வைத்ததுடன், அங்கே பலர் இந்த செயலை பாராட்டியிருந்தனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு