வடமாகாண விவசாய பணிப்பாளர் பணிமனையில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராய விசேட விசாரணை குழு! ஆளுநர் நியமனம்...

ஆசிரியர் - Editor I
வடமாகாண விவசாய பணிப்பாளர் பணிமனையில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராய விசேட விசாரணை குழு! ஆளுநர் நியமனம்...

வடமாகாண விவசாய பணிப்பாளர் பணிமனையில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா 3 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளார். 

விவசாய பணிப்பாளர் பணிமனையில் இடம்பெற்ற நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் தொடர்பில் விசாரிப்பதற்கான ஆரம்ப புலன் விசாரணை குழுவே இவ்வாறு   நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த விசாரணை குழுவில் வடமாகாண சிறுவர் நன்னடத்தை அமைச்சின் கணக்காளர் விஷ்ணு வடமாகாண விவசாய அமைச்சின் நிர்வாக அதிகாரி சாந்தசீலன் வடமாகாண விதை உற்பத்திக் கூட்டுறவு நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் சதீஷ் 

ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு