யாழ்.மாவட்ட நெல் செய்கையாளர்களுக்கு கமநலசேவை திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட நெல் செய்கையாளர்களுக்கு கமநலசேவை திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு..!

யாழ்.மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படும் டீசலை பெறாதவர்கள் உடனடியாக அதனை பெற்றுக் கொள்ளும்படி மாவட்ட உதவி கமநல ஆணையாளர் எஸ்.நிஷாந்தன் அறிவித்தல் விடுத்திருக்கின்றார். 

நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்படி அறிவிப்பை விடுத்திருக்கின்றார். 

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பிரதேச கமநலசேவைகள் நிலையம் ஊடாக தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான எரிபொருள் வழங்கப்படுகிறது.

இவ்வாறு வழங்கப்படும் எரிபொருளை பெற்றுக் கொள்ளாத விவசாயிகள் தமது பிரதேச கமநல நிலையங்களை தொடர்பு கொண்டு விரைவாக பெற்றுக் கொள்ளுமாறு அவர் இதன்போது குறிப்பட்டார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு