மின்வெட்டு நேரத்தில் தையல் கடைக்குள் புகுந்து வாள்வெட்டு! பருத்தித்துறை நகரில் ரவுடிகள் அட்டகாசம்..

ஆசிரியர் - Editor I
மின்வெட்டு நேரத்தில் தையல் கடைக்குள் புகுந்து வாள்வெட்டு! பருத்தித்துறை நகரில் ரவுடிகள் அட்டகாசம்..

யாழ்.பருத்தித்துறை நகரில் உள்ள தையல் கடை ஒன்றுக்குள் முக மூடிகளுடன் நுழைந்த ரவுடிகள் கடையை அடித்து நொருக்கியதுடன், உடை உரிமையாளரை வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. 

சம்பவத்தில் கடை உரிமையாளர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு மின்வெட்டு அமுலில் இருந்த சமயம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் ச.பாலகுமார் (வயது44) என்பவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேற்படி தையல் கடை உரிமையாளருக்கு ரவுடிகளிடமிருந்து தொடர்ச்சியாக அச்சுறுத்தல் வந்ததாகவும், 

இது தொடர்பாக கடை உரிமையாளர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்துள்ளார். 

மேலும் வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் அத்தியட்சகர் பணிமனையில் நேற்றுமுன் தினம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் 

நேற்று இரவு குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் கூறினர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு