யாழ்.மானிப்பாயில் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து இளைஞன் மீது வாள்வெட்டு! வர்த்தக நிலையம் மீதும் தாக்குதல்...

ஆசிரியர் - Editor I
யாழ்.மானிப்பாயில் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து இளைஞன் மீது வாள்வெட்டு! வர்த்தக நிலையம் மீதும் தாக்குதல்...

யாழ்.மானிப்பாய் நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு குழு அங்கு வேலை செய்யும் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளதுடன், வர்த்தக நிலையத்திலிருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றது. 

குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த வர்த்தக நிலையத்திற்குள் வாள்களுடன் நுழைந்த 3 பேர் கொண்ட வாள்வெட்டு குழு அந்த வர்த்தக நிலையத்தில் வேலை செய்யும் ஜெயக்குமார் சஜீந்திரன் (வயது21) என்ற இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது. 

பின்னர் வர்த்தக நிலையத்திலிருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு