யாழ்.கல்வியங்காட்டில் வீடு புகுந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் தச்சன்தோப்பு பகுதியில் மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.கல்வியங்காட்டில் வீடு புகுந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் தச்சன்தோப்பு பகுதியில் மீட்பு!

யாழ்.கல்வியங்காடு - கலைமகள் வீதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து மோட்டார் சைக்கிளை திருடிச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் தென்மராட்சி - தச்சன் தோப்பு பகுதியில் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

திருடப்பட்ட மோட்டர் சைக்கிள் தச்சன் தோப்பு பிள்ளையார் கோவில் முன்பாக நின்ற தகவல் கோப்பாய் பொலிஸாருக்கு வழங்கப்பட்டது.

குறித்த இடத்திற்கு விரைந்த கோப்பாய் குற்றத்தடுப்பு பொலிஸார் மோட்டார் சைக்கிளை மீட்டு பொலிஸ் நிலையம் எடுத்து சென்றனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதோடு நீதிமன்றில் பாரப்படுத்தும் நடவடிக்கையை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு