தவானின் பதவி பறிப்பு!! -புதிய அணித்தலைவராகிறார் ராகுல்-

ஆசிரியர் - Editor II
தவானின் பதவி பறிப்பு!! -புதிய அணித்தலைவராகிறார் ராகுல்-

இந்திய கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லோகேஷ் ராகுல் ஐ.பி.எல் ரி-20 தொடருக்குப்பின் காயம் காரணமாக எவ்வித போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. 

ஜெர்மனி சென்ற இவர் 'ஹெர்னியா' அறுசைச் சிகிச்சை செய்தார். இதனால் தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, அயர்லாந்து, தொடரில் சேர்க்கப்படவில்லை. பின் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மேற்கிந்திதீவுகளுக்கான தொடரில் இருந்தும் விலகினார். இவருக்குப் பதிலாக இந்திய ஒருநாள் போட்டிக்கான அணிக்கு ஷிகர் தவான் தலைவராக  செயல்பட்டார்.

39 ஆண்டுகால வரலாற்றில் மேற்கிந்தியதீவுகளின் மண்ணில் முதன் முறையாக இவரது அணி 3–0 என முழுமையாக ஒருநாள் தொடரை வென்றது. அடுத்து ஆக் நடக்கவுள்ள ஜிம்பாப்வே தொடரிலும் தவான் அணித்தலைவராக தொடர இருந்தார்.

இதனிடையே காயம், கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்ட ராகுல், மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். ஜிம்பாப்வே தொடருக்கான ஒருநாள் அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டார். தவான் துணைத் தலைவராக செயல்பட உள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு