மாட்டுடன் மோதுவதை தவிர்க்க முயன்ற ஆட்டோ தனியார் கல்வி நிலையத்திற்குள் புகுந்து விபத்து! ஒருவர் காயம், யாழ்.நெல்லியடி மாலுசந்தியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
மாட்டுடன் மோதுவதை தவிர்க்க முயன்ற ஆட்டோ தனியார் கல்வி நிலையத்திற்குள் புகுந்து விபத்து! ஒருவர் காயம், யாழ்.நெல்லியடி மாலுசந்தியில் சம்பவம்..

யாழ்.நெல்லியடி மாலுசந்தி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தனியார் கல்வி நிலையத்திற்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 

குறித்த விபத்து நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றள்ளது. வீதியில் குறுக்கே திடீரென மாடு நுழைந்த நிலையில், மாட்டுடன் மோதுவதைத் தவிர்ப்பதற்காக, 

ஆட்டோவை வீதியின் மறுதிசைக்கு கொண்டு செல்ல சாரதி முற்பட்டுள்ளார். இதன்போது வேகக் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, 

வெள்ள வாய்க்காலுக்கு மேலாக பாய்ந்து, அருகில் இருந்த தனியார் கல்வி நிலைத்திற்குள் நுழைந்து விபத்துக்குள்ளானது. 

சம்பவத்தில் ஆட்டோ கடுமையாக சேதமடைந்தது. சரதியான 50 வயதுடைய மாம்பழம் மகேந்திரன் என்பவர் படுகாயமடைந்த நிலையில், 

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்துத் தொடர்பான விசாரணைகளை நெல்லியடிப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு