பெற்றோல் பெறுவதற்கு QR குறியீட்டை காண்பித்துக் கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு! யாழ்.கொக்குவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
பெற்றோல் பெறுவதற்கு QR குறியீட்டை காண்பித்துக் கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு! யாழ்.கொக்குவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சம்பவம்..

யாழ்.கொக்குவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெறுவதற்கு கியூ ஆர் குறியீட்டை காண்பித்த இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த சொரூபன் (வயது40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

கியூ அர் குறியீட்டை காண்பித்த அவர் அடுத்த நொடியே மோட்டார் சைக்கிளுடன் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். திடீர் மாரடைப்பே உயிரிழப்புக்கு காரணம் என கூறப்படுகின்றது. 

சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு