எரிபொருள் பங்கீட்டு அட்டை பெறுவதற்கு வரிசையில் காத்திருந்தவர் உயிரிழப்பு! யாழ்.ஊர்காவற்றுறையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
எரிபொருள் பங்கீட்டு அட்டை பெறுவதற்கு வரிசையில் காத்திருந்தவர் உயிரிழப்பு! யாழ்.ஊர்காவற்றுறையில் சம்பவம்..

எரிபொருள் அட்டை பெறுவதற்கு காத்திருந்த குடும்பஸ்த்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் நேற்று ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றிருக்கின்றது. 

சம்பவத்தில் வேலணை புளியங்கூடல் பகுதியை சேர்ந்த நடராசா பிரேம்குமார் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனக்கான எரிபொருள் அட்டையினை பெற்றுக்கொள்வதற்காக 

ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்கு சென்று காத்திருந்த வேளை திடீரென மயங்கி சரிந்துள்ளார். அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஊர்காவற்துறை வைத்திய சாலையில் அனுமதித்த போதிலும் 

சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு