நிறுத்தாமல் சென்ற பேருந்தின் கண்ணாடியை கல்லால் எறிந்து உடைத்த இளம்பெண் கைது! யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா சென்ற இ.போ.ச பேருந்து...

ஆசிரியர் - Editor I
நிறுத்தாமல் சென்ற பேருந்தின் கண்ணாடியை கல்லால் எறிந்து உடைத்த இளம்பெண் கைது! யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா சென்ற இ.போ.ச பேருந்து...

நிறுத்தாமல் சென்றதால் கோபத்தில் இ.போ.ச பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

புளியங்குளம் பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இந்த சம்பம் குறித்து மேலும் தொியவருவதாவது, 

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தை புளியங்குளம் பகுதியில் பெண் ஒருவர் மறித்துள்ளார். 

எனினும் பேருந்து நிறுத்தாமல் சென்றுள்ளது. இதனால் கோபமடைந்த பெண் கல் ஒன்றை எடுத்து பேருந்து மீது வீசி கண்ணாடியை உடைத்துள்ளார். 

இதனையடுத்து பேருந்து சாரதி வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் புளியங்குளம் பகுதியை சேர்ந்த 28 வயதான பெண் கைது செய்யப்பட்டார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு