ஒரு லீற்றர் 2500 ரூபாய் வீதம் 40 லீற்றர் டீசலை விற்பனை செய்த பதுக்கல் வியாபாரி கையும் களவுமாக சிக்கினார்..!

ஆசிரியர் - Editor I
ஒரு லீற்றர் 2500 ரூபாய் வீதம் 40 லீற்றர் டீசலை விற்பனை செய்த பதுக்கல் வியாபாரி கையும் களவுமாக சிக்கினார்..!

ஒரு லீற்றர் 2500 ரூபாய் வீதம் 40 லீற்றர் டீசல் விற்பனை செய்த 31 வயதான இளைஞர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் நேற்ற பிற்பகல் வவுனியா - பட்டானிச்சூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிசார் 

பட்டானிச்சூர் பகுதியில் வைத்து குறித்த இளைஞனை கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவரது வீட்டிலும் மேற்கொண்ட சோதனை நடத்தப்பட்டது.

வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் வசித்து வந்த 31 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இளைஞரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு