அதிகாலையில் கடற்படையினர் நடாத்திய சுற்றிவளைப்பு 54 பேர் கைது..!

ஆசிரியர் - Editor I
அதிகாலையில் கடற்படையினர் நடாத்திய சுற்றிவளைப்பு 54 பேர் கைது..!

மட்டக்களப்பு - பாலமீன்மடு கடற்கரையில் இன்று அதிகாலை கடற்படையினர் நடாத்திய விசேட சுற்றிவளைப்பு தேடுதலில் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு கடற்படையினர் கூறியுள்ளனர். 

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்டவேளையிலேயே குறித்த 54 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களை திருகோணமலை - துறைமுகத்திற்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அண்மைக்காலமாக சட்டவிரோதமாக நாட்டை விட்டு தப்பிச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு