நடிகராக அறிமுகமாகும் செந்திலின் மகன்!!

ஆசிரியர் - Editor II
நடிகராக அறிமுகமாகும் செந்திலின் மகன்!!

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகர் செந்திலின் மகன் மணிகண்ட பிரபு புதிய படம் ஒன்றில் நடிகராக அறிமுகமாகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் பாபி சிம்ஹா, அறிமுக இயக்குனர் என்.எஸ்.ராகேஷ் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'தடை உடை' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆக்சன் திரில்லர் படமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் பிரபல காமெடி நடிகர் செந்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் அவரது மகன் மணிகண்ட பிரபு இந்த திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமாக உள்ளார். ரேஷ்மி சிம்ஹா தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தில், மிஷா நரங், பிரபு, ரோகினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் செந்தில் மற்றும் மணிகண்ட பிரபு இருவரும் அப்பா மகனாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு