யாழ்ப்பாணத்தில் 2ம் மொழி கற்கைகளை நிறைவுசெய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்த நீதி அமைச்சர் விஜயதாஸ..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தில் 2ம் மொழி கற்கைகளை நிறைவுசெய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்த நீதி அமைச்சர் விஜயதாஸ..!

யாழ்ப்பாணம் இந்து - பௌத்த கலாசார பேரவையில் 2ம் மொழி சிங்கள கற்கைகளை நிறைவுசெய்த மாணவர்களை நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளார். 

இந்நிகழ்வில் உரையாற்றிய விஜயதாச ராஜபக்ச இரண்டாம் மொழி கல்வியின் அவசியம் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தெரிந்திருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகவுள்ளது. 

மற்றும் இனங்களுக்கு இடையில் பரஸ்பர நல்லுறவை ஏற்படுத்துவதற்காக மொழிகள் அவசியமாகின்றன ஆகிய கருத்துகளை முன்வைத்தார். 

இரண்டாம் மொழி கற்கை நெறி நிலையத்தின் இயக்குனர் இராமச்சந்திரன் உரையாற்றும்போது தற்போது நாட்டில் உள்ள நேர்மையான புத்திஜீவிகளில் ஒருவர் விஜயதாச ராஜபக்ச எனவும் 

அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு தற்போது நாட்டில் இருக்கும் பொருத்தமானவர் இவர்தான் எனவும் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், 

வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர், 52 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மற்றும் உதவி அரசாங்க அதிபர் அதிகாரிகள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு