காணாமல்போனதாக கூறப்பட்ட இளைஞனை கண்டுபிடித்த இராணுவம்..! விசாரணையில் அதிர்ச்சி தகவல்..

ஆசிரியர் - Editor I
காணாமல்போனதாக கூறப்பட்ட இளைஞனை கண்டுபிடித்த இராணுவம்..! விசாரணையில் அதிர்ச்சி தகவல்..

தொழிற்பயிற்சி நிலையம் ஒன்றுக்கு செல்வதாக கூறி சென்றிருந்த நிலையில் காணாமல்போனதாக கூறப்பட்ட19 வயதான இளைஞன் மட்டக்களப்பில் காதலியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி - கனகாம்பிகை குளம் பகுதியைச் சேர்ந்த உதயராஜ் அம்சவர்தன் என்ற 19 வயது இளைஞன் கடந்த 16 ஆம் திகதி காணாமல் போயிருந்ததாக கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

மேற்படி இளைஞன் தொழிற்பயிற்சி நிலையம் ஒன்றுக்கு சென்றிருந்த நிலையிலேயே காணாமல் போயிருந்தார் என குறித்த இளைஞரின் தாயாரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த இளைஞன் மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் அப்பகுதி இராணுவத்தினரால் அடையாளம் காணப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளார்.

குறித்த நபர் அவரது காதலியுடன் இங்கு வந்து இருப்பதாகவும் இதன்போது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு