யாழ்ப்பாணம் வருகைதந்த அமைச்சர் நிமால் சிறீபால டீ சில்வாவுக்கு யாழ்.புகைரத நிலையத்தில் வரவேற்பு..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் வருகைதந்த அமைச்சர் நிமால் சிறீபால டீ சில்வாவுக்கு யாழ்.புகைரத நிலையத்தில் வரவேற்பு..!

யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் நிமால் சிறீபால டீ சில்வாவை யாழ்.புகைரத நிலையத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வரவேற்றுள்ளார்.

விமானப் போக்குவரத்து மற்றும் கப்பற்றுறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு வருகைதந்துள்ளார்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றின் நிலைமைகள் குறித்த ஆராய்வதை பிரதான நோக்கமாக கொண்டு மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட குழுவினர் குறித்த பகுதிகளுக்கான கள விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு