அதிகாலையில் நடந்த கோர விபத்து..! குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
அதிகாலையில் நடந்த கோர விபத்து..! குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயம்..

திருகோணமலை - ஹபரணை வீதியில் ஹயஸ் வாகனம் ஒன்றும் லொறி ஒன்றும் மோதிக் கொண்டதில் ஹயஸ் வாகனத்தில் யணத்த குழந்தை உள்ளிட்ட 4 பேர் காயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 

மேற்படி விபத்துச் சம்பவம் இன்று (18) அதிகாலை 1.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

கொழும்பிலிருந்து மட்டகளப்புக்குச் சென்ற வேன் ஒன்றும் திருகோணமலையிலிருந்து குருணாகலைக்குச் சென்ற லொறியொன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளானோர் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கின்றனர். 

வேனில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை உட்பட நால்வர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு