யாழ்.உரும்பிராய் சந்தியில் பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து..! இருவர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.உரும்பிராய் சந்தியில் பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து..! இருவர் படுகாயம்..

யாழ்.உரும்பிராய் சந்தியில் நேற்று மாலை மோட்டார் சைக்கிளும் - பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாணத்திலிருந்து புன்னாலைக்கட்டுவன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து கோப்பாய் - மானிப்பாய் வீதியில் உரும்பிராய் சந்தியில் சடுதியாக வீதியை கடக்க முயற்சித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. 

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு