லண்டனில் இருந்து நாடு திரும்பிய இளம் குடும்ப பெண் சடலமாக மீட்பு..!

ஆசிரியர் - Editor I
லண்டனில் இருந்து நாடு திரும்பிய இளம் குடும்ப பெண் சடலமாக மீட்பு..!

லண்டனில் இருந்து நாடு திரும்பிய இளம் குடும்ப பெண் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். 

குறித்த சம்பவம் நேற்று இரவு 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். 

குறித்த பெண்ணின் கணவரும், இரு பிள்ளைகளும் லண்டனில் வசித்து வரும் நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் குறித்த பெண் லண்டனில் இருந்து வவுனியா - தோணிக்கல் கிராமத்திற்கு வந்துள்ளார். 

இந்நிலையிலேயே அவரது சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்த குறித்த பெண்ணை காணவில்லை என உறவினர்கள் தேடிய போது கிணற்றில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

அப்பகுதி இளைஞர்கள், பொது மக்களின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

30 வயதுடைய பெண்ணே இவ்வாறு மீட்கப்பட்டவராவார். அவரது சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு