வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்த ஒன்றரை வயது குழுந்தை..!

ஆசிரியர் - Editor I
வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்த ஒன்றரை வயது குழுந்தை..!

வாய்க்காலில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை வாய்க்காலில் 2 கிலோ மீற்றர் துாரம் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 

கிளிநொச்சி மருதநகர் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. 

வீட்டின் அருகில் இரணைமடு நீர்ப்பாசன வாய்க்கால் காணப்படுகிறது. தற்போது அவ்வாய்க்கால் சிறுபோக நெற்செய்கைக்காக திறந்து விடப்பட்டுள்ளது. 

இதனால் அதிகளவு நீர் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்குள் வீழ்ந்த குழந்தை வீழ்ந்த இடத்திலிருந்து இரண்டு கிலோ மீற்றர் தூரம் வரை நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர். பி

ன்னர் உயிரிழந்த நிலையில் அயலவர்களினால் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகிறார்கள்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு