தறிகெட்டு ஓடிய லொறி..! வீதியில் பயணித்த இளைஞர்களை மோதி பின்னர் வர்த்தக நிலையம் மீது மோதி விபத்து, ஓருவர் உயிரிழப்பு, மேலும் ஒருவர் படுகாயம்...

ஆசிரியர் - Editor I
தறிகெட்டு ஓடிய லொறி..! வீதியில் பயணித்த இளைஞர்களை மோதி பின்னர் வர்த்தக நிலையம் மீது மோதி விபத்து, ஓருவர் உயிரிழப்பு, மேலும் ஒருவர் படுகாயம்...

கட்டுப்பாடற்ற வேகத்தினால் வீதியை விட்டு விலகிய லொறி எதிர்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதுடன், வர்த்தக நிலையம் ஒன்றின் மீது மோதி நின்றுள்ளது. 

இந்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். 

இன்று மதியம் வவுனயா ஏ 9 வீதியில் தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது. 

ஓமந்தை பகுதியில் இருந்து சென்ற பாரவூர்த்தி கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதோடு, அருகில் அமைந்துள்ள புதிய வர்த்தக கட்டிட தொகுதியிலும் மோதியுள்ளது. 

இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் பலியாகியதோடு, மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு