விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட வீடு..! சொகுசு காருடன் சிக்கிய நபர்..

ஆசிரியர் - Editor I
விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட வீடு..! சொகுசு காருடன் சிக்கிய நபர்..

விசேட அதிரடிப்படையினால் முற்றுகையிடப்பட்ட வீட்டிலிருந்து சுமார் 208 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 6 மணியளவில் கிளிநொச்சி விவேகாந்த நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர் வாடகைக்கு வீடு பெற்று வசித்து வந்துள்ளதாகவும், வியாபார நோக்கத்திற்காகவே மன்னாரிலிருந்து அங்கு தங்கியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்ட கஞ்சா சுமார் 208 கிலோ எடையுடையது எனவும், அதன் இலங்கை பெறுமதி 5 கோடி மதிக்கத்தக்கது எனவும் கூறப்படுகிறது. 

விசாரணை மேற்கொண்டுவரும் விசேட அதிரடிப்படையினர் சந்தேகநபரையும், கஞ்சா பொதியையும், 

பயன்படுத்தப்பட்ட சொகுசு காரினையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு