அதிகாலை 4 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த இளைஞனை காணவில்லை! பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பெற்றோர்...

ஆசிரியர் - Editor I
அதிகாலை 4 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த இளைஞனை காணவில்லை! பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பெற்றோர்...

அதிகாலை 4 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த இளைஞனை காணவில்லை. என பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருக்கின்றனர். 

குறித்த சம்பவம் வவுனியா குருமன்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவததில் கஜேந்திரன் கிருந்திகன் என்ற இளைஞனே காணாமல்போயுள்ளாார். 

குறித்த இளைஞன் நேற்றுமுன்தினம் அதிகாலை 4 மணியளவில் தனது வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். எனினும் இதுவரை அவர் வீடு திரும்பவில்லை. 

இதனையடுத்து அவரது குடும்பத்தினர் வவுனியா காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளனர். அவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 077 169 1244 / 0779302469 எனும் தொலைபேசி இலக்கங்களிற்கு 

அழைப்பை ஏற்படுத்தி தெரியப்படுத்துமாறு உறவினர்களால் கோரப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு